sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல் டி-20 கிரிக்கெட்: இந்தியா நிதான ஆட்டம்

/

முதல் டி-20 கிரிக்கெட்: இந்தியா நிதான ஆட்டம்

முதல் டி-20 கிரிக்கெட்: இந்தியா நிதான ஆட்டம்

முதல் டி-20 கிரிக்கெட்: இந்தியா நிதான ஆட்டம்


UPDATED : டிச 09, 2025 07:31 PM

ADDED : டிச 09, 2025 07:08 PM

Google News

UPDATED : டிச 09, 2025 07:31 PM ADDED : டிச 09, 2025 07:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டாக்: இந்திய அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி, பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 5 ஓவரில் 2 விக்கெட் இழந்து 32 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி, ஒரு நாள் தொடரில் இந்திய அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி-20தொடர் இன்று தொடங்கியது.

இரு அணிகளுக்கிடையே முதல் டி-20 போட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி, பீல்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் தொடங்கியது.

அதிர்ச்சி தந்த நிகிடி:

முதலில் களம் இறங்கிய சுப்மன் கில் 2 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி அடித்து,4 ரன்னில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 12 ரன்கள் எடுத்தபோது, நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா, திலக் வர்மா நிதானமாக ஆடி வருகின்றனர்.இந்திய அணி 5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.






      Dinamalar
      Follow us