sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அரசு நிர்வாகம் முடக்கம்: விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்கிறார் டிரம்ப்

/

அரசு நிர்வாகம் முடக்கம்: விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்கிறார் டிரம்ப்

அரசு நிர்வாகம் முடக்கம்: விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்கிறார் டிரம்ப்

அரசு நிர்வாகம் முடக்கம்: விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்கிறார் டிரம்ப்

6


ADDED : நவ 02, 2025 08:29 AM

Google News

6

ADDED : நவ 02, 2025 08:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: மிரட்டி பணம் பறிக்கும் பணிநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவோம் என அரசு நிர்வாகம் முடக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசு நிர்வாகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க, அந்நாட்டு பார்லிமென்டால் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டும். பார்லிமென்டின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறாவிட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது. இதனால், அத்தியாவசியமற்ற சேவைகள் மற்றும் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படும். இது பணி முடக்கம் என்று அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா பார்லிமென்டில் நிறைவேறவில்லை. இதையடுத்து, அக்டோபர் 1ம் தேதி முதல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. 31 நாட்களாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கும் நிலையில், 7 பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 62 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் அரசு நிர்வாகம் முடக்கம் குறித்து சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: நினைவில் கொள்ளுங்கள், குடியரசுக் கட்சியினரே, பணிநிறுத்தம் உட்பட எதுவாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சியினர் முடிவுக்குக் கொண்டுவருவார்கள். சண்டையிடுங்கள், போராடுங்கள்,வெற்றி கிடைக்கும்.

மிரட்டி பணம் பறிக்கும் பணிநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவோம். மேலும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை மிகவும் நல்லதாக்குவோம். இந்த ஜனநாயக அரசியல்வாதிகள் மீண்டும் ஒருபோதும் அமெரிக்காவை அழிக்க வாய்ப்பில்லை. குடியரசுக் கட்சியினரே புத்திசாலித்தனமாக இருங்கள், வெற்றி பெறுங்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவோம்!

மற்றொரு பதிவில் அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: நைஜீரிய அரசாங்கம் கிறிஸ்தவர்களைக் கொல்வதைத் தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா உடனடியாக நைஜீரியாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்திவிடும்.

அதுமட்டுமின்றி அமெரிக்கா தாக்குதல் நடத்தும். இந்தக் கொடூரமான அட்டூழியங்களைச் செய்யும் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்கப்படுவர். சாத்தியமான நடவடிக்கைக்குத் தயாராகுமாறு நமது படையினருக்கு இதன் மூலம் அறிவுறுத்துகிறேன். அமெரிக்காவின் தாக்குதல் வேகமாகவும், கொடூரமாகவும் இருக்கும்என நைஜீரிய அரசினை எச்சரிக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

சிறந்த சந்திப்பு

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான எனது சந்திப்பு, எங்கள் இரு நாடுகளுக்கும் ஒரு சிறந்த சந்திப்பாக அமைந்தது. இந்த சந்திப்பு அமைதி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.








      Dinamalar
      Follow us