ADDED : நவ 02, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'போராடாவிட்டால் நிலம் மட்டுமல்ல, ஓட்டுரிமையும் பறிபோய் விடும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
இன்று நாம் வாழும் தமிழகத்தின் பல பகுதிகளை, நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு, எல்லைப்போராட்டத் தியாகிகள் நாளில் என் வீரவணக்கம்.
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல; ஓட்டுரிமையே கூட பறிபோய் விடும் என, நம் தலைவர்கள் அப்போதே காட்டிச் சென்றுள்ளனர். அவர்கள் வழியில், தமிழகத்தின் உரிமைகளைக் காப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

