sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன? இண்டி கூட்டணி எம்பிக்கள் மீது அண்ணாமலை காட்டம்

/

அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன? இண்டி கூட்டணி எம்பிக்கள் மீது அண்ணாமலை காட்டம்

அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன? இண்டி கூட்டணி எம்பிக்கள் மீது அண்ணாமலை காட்டம்

அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன? இண்டி கூட்டணி எம்பிக்கள் மீது அண்ணாமலை காட்டம்

12


ADDED : டிச 09, 2025 03:14 PM

Google News

12

ADDED : டிச 09, 2025 03:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அவர்கள் அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிரட்ட தகுதி நீக்க நடவடிக்கையை ஒரு கருவியாக திமுக மற்றும் இண்டி கூட்டணி பயன்படுத்துகிறது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் சென்றுள்ள நிலையில் தகுதி நீக்க நோட்டீஸ் எதற்கு?

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை. அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

எந்தவொரு நீதிபதியின் தீர்ப்பையும் இண்டி கூட்டணி விரும்பவில்லை என்றால், நீதித்துறையை அடிபணியச் செய்ய அச்சுறுத்தும் ஒரு கருவியாக, பதவி நீக்க நடவடிக்கையை பயன்படுத்துவார்கள் என்பதை மக்களுக்கு சொல்கின்றனரா?

அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன இருக்க முடியும்? திமுக மற்றும் இண்டி கூட்டணி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு, பிரிவினைவாத அரசியல்தான் முதலில் என்பதை நிரூபித்துள்ளன. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us