sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பழுதடைந்துள்ள மீன் இறங்குதள கட்டடங்கள் இடித்து அகற்ற கடலுார் மீனவர்கள் கோரிக்கை

/

 பழுதடைந்துள்ள மீன் இறங்குதள கட்டடங்கள் இடித்து அகற்ற கடலுார் மீனவர்கள் கோரிக்கை

 பழுதடைந்துள்ள மீன் இறங்குதள கட்டடங்கள் இடித்து அகற்ற கடலுார் மீனவர்கள் கோரிக்கை

 பழுதடைந்துள்ள மீன் இறங்குதள கட்டடங்கள் இடித்து அகற்ற கடலுார் மீனவர்கள் கோரிக்கை


ADDED : டிச 07, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 07, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்: கூவத்துார் அடுத்த கடலுார் பெரியகுப்பத்தில், அபாய நிலையில் உள்ள மீன் இறங்குதள கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டுமென, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில் உள்ள சின்னகுப்பம், பெரிய குப்பம், ஆலிகுப்பம் ஆகிய பகுதிகளில், மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இத்தொழில் மேம்பாடு கருதி மீன்வளத்துறை, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெரியகுப்பத்தில், 12 ஆண்டுகளுக்கு முன் மீன் இறங்குதளம் அமைத்தது.

இதில் முதலில் மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், வலை பாதுகாப்பு கூடம், வங்கி கட்டடம் ஆகியவை, 3 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டன.

அடுத்து, 2 கோடி ரூபாய் மதிப்பில் மீன் பதப்படுத்துதல் கூடம், குளிர்பதன கிடங்குகள் ஆகியவை அமைக்க இருந்த நிலையில், கடலரிப்பு காரணமாக இப்பகுதியில் கடல் நீர் புகுந்தது.

கடல் அலைகள் தாக்குதலில், இந்த கட்டடங்கள் சேதமடைந்தன.

தற்போது, இந்த கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்து, அபாய நிலையில் உள்ளதால் படகுகள், வலைகளை பாதுகாப்பாக வைக்க இடமின்றி, மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

பழுதடைந்த இந்த கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டுமென, முந்தைய கலெக்டர் ராகுல்நாத்திடம் முறையிட்டனர்.

அவர் அறிவுறுத்தியும், தற்போது வரை இந்த கட்டடங்கள் இடிக்கப் படாமல் உள்ளன.

எனவே, இடையூறாக உள்ள இந்த பழைய கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டுமென, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us