/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபம்
/
வேதகிரீஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபம்
ADDED : டிச 02, 2025 06:13 AM
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், இன்று பரணி தீபமும், நாளை கார்த்திகை மஹாதீபமும் ஏற்றப்படுகிறது.
திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இன்று மாலை 6:00 மணிக்கு மலைக்கோவில், தரைப்பகுதி பக்தவச்சலேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
நாளை காலை, பஞ்சமூர்த்தி சுவாமியருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
மாலை, கோவில் ஊழியர்கள், குடங்களுடன் மாடவீதிகளில் சென்று, பக்தர்கள் உபயமாக அளிக்கும் எண்ணெயுடன், வேதகிரீஸ்வரர் கோவிலை அடைந்து, 6:00 மணிக்கு மஹா தீபம் ஏற்றுவர்.
சொக்கப்பனை விநாயகர் கோவில் பகுதியில், இரவு சொக்கப்பனை ஏற்றி, பஞ்சமூர்த்தி சுவாமியர் வீதியுலா செல்வர்.

