/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு ஒப்படைக்க தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
வீடு ஒப்படைக்க தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
வீடு ஒப்படைக்க தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
வீடு ஒப்படைக்க தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : டிச 02, 2025 06:13 AM
சென்னை: சோழிங்கநல்லுார் அடுத்த செம்மஞ்சேரியில், பி.பி.சி.எல்., ஹோம்ஸ் நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இதில் வீடு வாங்க, சிவசேகர் என்பவர், 2019ல் முன்பதிவு செய்தார்.
இதற்காக அவர், 50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். இது தொடர்பான ஒப்பந்தத்தில், 2019 டிச., இறுதிக்குள் வீட்டை ஒப்படைப்பதாக, கட்டுமான நிறுவனம் தெரிவித்தது.
ஆனால், அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக, பணம் செலுத்திய சிவசேகர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார். ஆணையத்தின் விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் தொடர்புடைய திட்டத்தில் வீடு வாங்க, மனுதாரர் பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட காலத்தில், கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை.
எனவே, இதனால் மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கட்டுமான நிறுவனம், 5 லட்சம் ரூபாயை இழப்பீடாகவும், 50,000 ரூபாயை வழக்கு செலவுக்காகவும், மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

