/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வங்கி மேலாளர் போல் பேசி ரூ.3 லட்சம் 'ஆட்டை'
/
வங்கி மேலாளர் போல் பேசி ரூ.3 லட்சம் 'ஆட்டை'
ADDED : மார் 18, 2024 05:09 AM
தாம்பரம், : மேற்கு தாம்பரம், மீனம்பாள் சந்து பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 68. இவர், மதுரை, செங்கப்படை எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்.
இந்த வங்கியில் இருந்து, ராஜேஸ்வரிக்கு சில நாட்களுக்கு முன், ஏ.டி.எம்., கார்டு வந்துள்ளது. அந்த கார்டை ஆக்டிவேட் செய்யாமல் வைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி ராஜேஸ்வரியின் மொபைல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், வங்கி மேலாளர் பேசுவதாகவும், ஏ.டி.எம்., கார்டை ஆக்டிவேட் செய்ய, ஓ.டி.பி., எண் வந்துள்ளது, அதை சொல்லும்படி கூறியுள்ளார்.
இதை நம்பிய ராஜேஸ்வரி, ஓ.டி.பி., எண்ணை கூறியுள்ளார். சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 75,000 ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது ஹதெரியவந்தது.
அதேபோல், ராஜேஸ்வரியின், மற்றொரு வங்கி கணக்கு உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின், தாம்பரம் கிளை மேலாளர் பேசுவதாக கூறிய மர்ம நபர், மீண்டும் ஓ.டி.பி., எண்ணை கேட்டு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து, 2.29 லட்சம் ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.
அதன் பின்னரே, மர்ம நபர்கள் ஓ.டி.பி., எண்ணை கேட்டு, தன் வங்கி கணக்குகளில் இருந்து நுாதன முறையில், 3.04 லட்சம் ரூபாயை திருடியது தெரியவந்தது. தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

