sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 திட்டமிடலின்றி கட்டப்பட்ட நிழற்குடை மொறப்பாக்கத்தில் வரிப்பணம் வீண்

/

 திட்டமிடலின்றி கட்டப்பட்ட நிழற்குடை மொறப்பாக்கத்தில் வரிப்பணம் வீண்

 திட்டமிடலின்றி கட்டப்பட்ட நிழற்குடை மொறப்பாக்கத்தில் வரிப்பணம் வீண்

 திட்டமிடலின்றி கட்டப்பட்ட நிழற்குடை மொறப்பாக்கத்தில் வரிப்பணம் வீண்


ADDED : டிச 07, 2025 06:10 AM

Google News

ADDED : டிச 07, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, பேருந்து பயணியர் நிழற்குடை பயன்படுத்தப்படாமலேயே, இருக்கைகள் உடைந்து வீணாகியுள்ளன.

உத்திரமேரூர் -- மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலையில், மொறப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது.

மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மொறப்பாக்கம் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் இடதுபுறத்தில், 2020- - -21-ல், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

நுழைவாயிலின் வலதுபுறத்தில், பழைய பேருந்து பயணியர் நிழற்குடை உள்ளது. ஒரே மார்க்கத்தில், ஒரே பகுதியில் அருகருகே இரண்டு நிழற்குடைகள் உள்ளன.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்டவை, பழைய நிழற்குடை பகுதி நிறுத்தத்தில் நிறுத்துவதால், அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், புதிதாக கட்டப்பட்ட நிழற்குடை பயன்பாடு இன்றி, மது பிரியர்களின் கூடாரமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது.

மேலும், இருக்கைகள் அனைத்தும் உடைந்து வீணாகியுள்ளன.

முறையான திட்டமிடல் இல்லாமல் நிழற்குடை கட்டப்பட்டதால், மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us