/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும்
/
சேதமான மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும்
ADDED : டிச 02, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி ருப்போரூர் அடுத்த பூண்டி கிராமத்தில், பிரதான சாலையை ஒட்டி மின் கம்பம் உள்ளது.
இதன் மூலமாக விவசாயம் மின்மோட்டார்கள் மற்றும் வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மின்கம்பம் கடுமையாக சேதமடைந்து, கடந்த 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப் படாமல் உள்ளது.
எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயமான நிலையில் உள்ளது.
எனவே, மின் கம்பம் விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த கம்பத்தை மாற்றி புதிதாக பொருத்த வேண்டும்.
- என்.பிரபு, பூண்டி கிராமம்.

