sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேர்தல் அலுவலர்களுக்கு செங்கையில் பயிற்சி

/

தேர்தல் அலுவலர்களுக்கு செங்கையில் பயிற்சி

தேர்தல் அலுவலர்களுக்கு செங்கையில் பயிற்சி

தேர்தல் அலுவலர்களுக்கு செங்கையில் பயிற்சி


ADDED : மார் 14, 2024 07:52 PM

Google News

ADDED : மார் 14, 2024 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான, பயிற்சி வகுப்பு நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லுார் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை, நிலையான சோதனை படை, வீடியோ குழுக்களை அமைத்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

அதனால், இக்குழுக்களில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில், நேற்று முன்தினம் பயிற்சி நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு பயிற்சியில், 180 அலுவலர்கள் பங்கேற்றனர். பயிற்சியின் போது, சுங்கச்சாவடிகள் கண்காணிப்பு, முக்கிய சாலைகள் சந்திப்பு, வாகனத் தணிக்கை உள்ளிட்ட பணிகள் குறித்தும், தேர்தல் நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us