/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதுகாப்பு கருதி ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?
/
பாதுகாப்பு கருதி ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?
பாதுகாப்பு கருதி ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?
பாதுகாப்பு கருதி ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?
ADDED : ஜன 30, 2025 10:25 PM
அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்டு 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
அதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொழுப்பேடு, கரசங்கால், முருங்கை, வேப்பங்கரனை, விண்ணம் பூண்டி, கிளியா நகர், ராமாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், செங்கல்பட்டு மாவட்ட எல்லையின் கடைசியில் உள்ளன.
இக்கிராமங்களை ஒட்டி விழுப்புரம் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகள் ஆரம்பமாகின்றன.
அதில், ஆத்துார் சுங்க சாவடியில் இருந்து கரசங்கால், கொங்கரை மாம்பட்டு, முருங்கை, சிறுதாமூர், ஒரத்தி, விண்ணம்புண்டி, வேப்பங்கரனை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக 40க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் துாரம் மாநில நெடுஞ்சாலை செல்கிறது.
மாவட்ட எல்லையின் கடைசியில் உள்ள கிராமங்கள் வழியே நெடுஞ்சாலை செல்வதால், குற்றசம்பவங்களில் ஈடுபட்டு, அவ்வழியே தப்பி செல்பவர்களை கண்டறியும் வகையில், சாலையின் முக்கிய சந்திப்பு பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் இன்றி உள்ளன.
இதனால், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், அசால்டாக தப்பிச் செல்கின்றனர்.
மாவட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள ஊராட்சிகள் அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் எல்லைக்கு உட்பட்டு உள்ளன.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து, மாவட்ட எல்லையில் உள்ள கிராமங்களின் முக்கிய சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

