ADDED : பிப் 26, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணியை அடுத்த கீழாந்துாரை சேர்ந்தவர்சண்முகம் மனைவி சுந்தரம்மாள், 60.
இவருக்கு, கடந்த 22ம் தேதி, மூச்சு திணறல் ஏற்பட்டதால், திருத்தணி அரசு மருத்துவமனையில், உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, சுந்தரம்மாள் மருத்துவமனை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்கத் தாலியை பறித்து தப்பினார்.
இதுகுறித்து, சுந்தரம்மாளின் மகன் சுரேஷ் அளித்த புகாரை அடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

