ADDED : டிச 07, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இண்டிகோ நிறுவனத்தில், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த 4 நாட்களாக, விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முழுதும், சென்னை விமான நிலையத்தில் இருந்து இயங்கும் அனைத்து விமானங்களையும், இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, சென்னையில் இருந்து புனேக்கு முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே, நேற்று காலையில் இருந்து இரவு வரை, சென்னையில் இருந்து டில்லி, மும்பை, கொல்கட்டா உள்ளிட்ட, 28 இடங்களுக்கு செல்லும் விமானங்கள், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய, 20 விமானங்கள் என, 48 இண்டிகோ விமானங்கள், நேற்று ரத்து செய்யப்பட்டன.

