/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடத்தி பணம் பறிப்பதே எங்கள் 'ஸ்டைல்' அஜய் வாண்டையார் வாக்குமூலம்
/
கடத்தி பணம் பறிப்பதே எங்கள் 'ஸ்டைல்' அஜய் வாண்டையார் வாக்குமூலம்
கடத்தி பணம் பறிப்பதே எங்கள் 'ஸ்டைல்' அஜய் வாண்டையார் வாக்குமூலம்
கடத்தி பணம் பறிப்பதே எங்கள் 'ஸ்டைல்' அஜய் வாண்டையார் வாக்குமூலம்
ADDED : ஜூலை 09, 2025 11:48 PM
சென்னை, 'போலீசார் உதவியுடன், டவர் லொகேஷனை எடுத்து, கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் தொழில் அதிபர்களை கடத்தி, துப்பாக்கி முனையில் பணம் பறிப்பதுதான் எங்கள் ஸ்டைல்' என, அஜய் வாண்டையார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பரத்குமார், 39; ஸ்கிரீன் எனர்ஜி நிறுவன இயக்குநர். இவர், நாடு முழுதும், சூரிய சக்தி வாயிலாக மின் உற்பத்தி செய்யும் ஆலைகளை நிறுவியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலை அமைக்க அனுமதி பெற்றுத் தருவதாகவும், நிலம் வாங்கித் தருவதாகவும், சென்னை பனையூரைச் சேர்ந்த அஜய் வாண்டையார், 36 மற்றும் இவரின் கூட்டாளிகள், 2.11 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, அஜய் வாண்டையார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். இவர்களை ஒரு நாள் காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர்.
போலீசாரிடம், அஜய் வாண்டையார் அளித்துள்ள வாக்குமூலம்:
பிரச்னைக்குரிய இடங்களையும், வெளிநாடுகளின் வசிப்போரின் நிலங்களையும் போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிப்போம். நிலம் வாங்கித் தருவதாக, தொழில் அதிபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ளோம்.
மதுரை ஆயுதப்படையில் பணிபுரியும் செந்தில்குமார் மற்றும் இரண்டு எஸ்.ஐ.,க்கள் உட்பட பல போலீசார் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இவர்கள் உதவியுடன், எங்களிடம் பணத்தை திரும்ப கேட்கும் தொழில் அதிபர்களின் மொபைல் போன் டவர் சிக்னல் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
அந்த இடத்திற்குச் சென்று, பணம் தருவதாக ேஹாட்டலுக்கு அழைத்துச் சென்று, துப்பாக்கி முனையில் பணம் பறிப்போம்.
மோசடி தொகையில், சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் நிலங்கள் வாங்கியும் விற்றோம். அந்த வகையில் தான், பரத்குமாரிடமும், 2.11 கோடி வாங்கி மோசடி செய்தோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

