sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரயிலில் பயணி தவறவிட்ட 'லேப்டாப்' மீட்டு ஒப்படைப்பு

/

 ரயிலில் பயணி தவறவிட்ட 'லேப்டாப்' மீட்டு ஒப்படைப்பு

 ரயிலில் பயணி தவறவிட்ட 'லேப்டாப்' மீட்டு ஒப்படைப்பு

 ரயிலில் பயணி தவறவிட்ட 'லேப்டாப்' மீட்டு ஒப்படைப்பு


ADDED : டிச 09, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ரயிலில் பயணி தவறவிட்ட 90,000 ரூபாய் மதிப்பிலான 'லேப்டாப்'பை ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று காலை கன்னியாகுமரி விரைவு ரயில் வந்தது. அதில் பயணித்த விபின், 35, என்பவர், தன் 'லேட்டாப்'பை மறந்து வைத்துவிட்டு, இறங்கி சென்றுள்ளார். பின், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின், எஸ்.ஐ., அன்பு செழியன் ஆகியோர் ரயில்வே அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த விரைவு ரயில் பராமரிப்பு பணிக்காக சேத்துப்பட்டு பணிமனைக்கு சென்றதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விபின் பயணம் செய்த இருக்கையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு லேப்டாப் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புகார் அளித்த விபினை வரவழைத்து, லேப்டாப் ஒப்படைக்கப்பட்டது.

ஒப்படைக்கப்பட்ட லேப்டாப் மதிப்பு 90,000 ரூபாய். புகார் அளித்த சில மணி நேரங்களில், லேப்டாப்பை மீட்டு கொடுத்த ரயில்வே போலீசாருக்கு, விபின் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us