புழல் சிறையில் 'டி - சர்ட்' தயாரிப்பு கூடம் திறப்பு
புழல் சிறையில் 'டி - சர்ட்' தயாரிப்பு கூடம் திறப்பு
ADDED : ஜூலை 02, 2026 01:06 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உதவியுடன், 'டி - சர்ட்' தயாரிக்கும் தொழிற் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறை இயக்குநர், டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் நேற்று திறந்து வைத்தார்.
சந்தீப்ராய் ரத்தோட் கூறியதாவது:
புதிதாக தொடங்க ப்பட்டுள்ள இந்த டி - சர்ட் தயாரிப்பு பிரிவு, ஆடை உற்பத்தித் தொழிலில் கைதிகளுக்கு தேவையான திறன்களை கற்பிக்கும் வகையில் உள்ளது.
அவர்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் காலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற முடியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
