sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.45,500 உரியவரிடம் ஒப்படைப்பு வாலிபரின் நேர்மைக்கு பாராட்டு

/

 ரூ.45,500 உரியவரிடம் ஒப்படைப்பு வாலிபரின் நேர்மைக்கு பாராட்டு

 ரூ.45,500 உரியவரிடம் ஒப்படைப்பு வாலிபரின் நேர்மைக்கு பாராட்டு

 ரூ.45,500 உரியவரிடம் ஒப்படைப்பு வாலிபரின் நேர்மைக்கு பாராட்டு


ADDED : டிச 02, 2025 03:57 AM

Google News

ADDED : டிச 02, 2025 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: முதியவர் தவறவிட்ட 45,500 ரூபாயை மீட்டு கொடுத்த வாலிபரை, போலீசார் பாராட்டினர்.

ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம், தோட்டகார தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 28. நேற்று முன்தினம் மாலை, இவரது வீட்டு வாசலில் கிடந்த துணிப்பையில் 45,500 ரூபாய் மற்றும் பில் ஒன்று இருந்தது.

சரவணன், அந்த பணத்தை, ஆவடி முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், ஆவடி அடுத்த வாணியசத்திரம் பகுதியைச் சேர்ந்த சாம்பசிவராவ், 60 என்பவரின் பணம் என தெரிந்தது.

பாண்டேஸ்வரத்தில் உள்ள கல் சேம்பரில் பணிபுரியும் இவர், சம்பவத்தன்று கலெக்ஷன் செய்து முடித்து, சேம்பருக்கு திரும்பும்போது பணத்தை தவறவிட்டது தெரிந்தது.

ஆவடி முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சாம்பசிவராவை நேரில் வரவழைத்து நேற்று முன்தினம் பணத்தை ஒப்படைத்தார்.

மேலும், பணத்தை மீட்டு கொடுத்த சரவணனுக்கு, சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.






      Dinamalar
      Follow us