sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாகனங்களின் கண்ணாடி சூறையாடி 3 பேரை தாக்கிய வாலிபருக்கு 'காப்பு'

/

வாகனங்களின் கண்ணாடி சூறையாடி 3 பேரை தாக்கிய வாலிபருக்கு 'காப்பு'

வாகனங்களின் கண்ணாடி சூறையாடி 3 பேரை தாக்கிய வாலிபருக்கு 'காப்பு'

வாகனங்களின் கண்ணாடி சூறையாடி 3 பேரை தாக்கிய வாலிபருக்கு 'காப்பு'


ADDED : ஜன 31, 2025 12:22 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே. நகர்,

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிபின் ஜோஸ், 36. இவர், வண்டலுாரில் தங்கி, தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார்.

இவர், நேற்று முன்தினம் அதிகாலை, சவாரி ஏற்றிக் கொண்டு, கொருக்குப்பேட்டை, சி.பி., சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முன் இறக்கி விட வந்தார்.

அப்போது, அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர், கல்லால் பிபின் ஜோஸின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். அவரிடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.

பின், அவ்வழியே வந்த டெம்போ டிராவலரின் வாகன கண்ணாடியை உடைத்தவர், தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை தாக்கி, உள்ளே இருந்த காரின் கண்ணாடிகளையும் கல் வீசி உடைத்துள்ளார்.

தொடர்ந்து, கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் மேம்பாலம் அருகே நடந்து சென்ற சரண்ராஜ் என்பவரை வழிமறித்து, மது அருந்த பணம் கேட்டு, அருகிலிருந்த ஸ்டீல் டம்பளரால் தாக்கி தப்பியோடினார்.

இது குறித்து, ஆர்.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், கொருக்குப்பேட்டை, ரயில்வே காலனியைச் சேர்ந்த மதியழகன் என்ற மதி, 34, என்பது தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், மதியழகன் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்தது.

அவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us