தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : ஜூலை 05, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: நாரணாபுரம் ஊராட்சி, வடுகபாளையத்தில் மாரியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி துவங்கியது.

விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், முளைப்பாலிகை ஊர்வலம், கோபுரம் கண்திறத்தல் உள்ளிட்ட நிகவ்ச்சிகள் நடந்தன.

நேற்று முன்தினம், காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், இரவு 7:00 மணிக்கு பழனி ஆண்டவர் காவடி குழுவின் காவடியாட்டமும், ஜமாப்பும் நடந்தது.

நேற்று காலை 7:30 மணிக்கு, மாரியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், மூல கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

அனைத்து சுவாமிகளுக்கும் மகா அபிஷேகம், தச தரிசனம் நடந்தது. நாட்டுப்புற கோலாட்ட குழுவின் கலை நிகழ்ச்சி நடந்தது. மதியம் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us