/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை சுகாதார விழிப்புணர்வு: வடக்கிபாளையத்தில் முகாம்
/
கால்நடை சுகாதார விழிப்புணர்வு: வடக்கிபாளையத்தில் முகாம்
கால்நடை சுகாதார விழிப்புணர்வு: வடக்கிபாளையத்தில் முகாம்
கால்நடை சுகாதார விழிப்புணர்வு: வடக்கிபாளையத்தில் முகாம்
ADDED : நவ 03, 2025 01:45 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வடக்கிபாளையம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில், கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கறவை மாடுகள் பராமரிப்பு வழிகாட்டுதல் உள்ளிட்ட நோக்கங்களை உள்ளடக்கி, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடைத்துறை கோவை மண்டல இணை இயக்குனர் மகாலிங்கம் தலைமை வகித்தார். துணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர் சக்ளாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, கால்நடைகளில், நோய் பாதிப்பை கண்டறிதல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம், சினை சரிபார்ப்பு உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பாக பராமரிக்கப்படும் கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டது. கால்நடைத்துறை டாக்டர்கள் ஆதில், மோகனவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

