sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கே.கே.புதுாரில் வீணாகிறது போர்வெல் நீர்

/

 கே.கே.புதுாரில் வீணாகிறது போர்வெல் நீர்

 கே.கே.புதுாரில் வீணாகிறது போர்வெல் நீர்

 கே.கே.புதுாரில் வீணாகிறது போர்வெல் நீர்


ADDED : டிச 02, 2025 07:39 AM

Google News

ADDED : டிச 02, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போர்வெல் பழுது; வீணாகிறது நீர் கே.கே.புதுார், ராமலிங்க நகர், மூன்றாவது கிராஸ் வீதியில் போர்வெல் தண்ணீர் வீணாகி வருகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. போர்வெல்லை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

- ஜானகி லட்சுமணன்: குண்டும் குழியுமாக சாலை மாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி, சேரன்மாநகர் ஆசிரியர்கள் காலனியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

- மல்லிகார்ஜுனன்: சாலையைசீரமைக்க வேண்டும் சரவணம்பட்டி, சக்தி கார்டனில், பாதாள சாக்கடை கால்வாய் பணி முடிந்தபின், கான்கிரீட் மிக்ஸ் அமைக்காமல், களி மண்ணை அப்படியே விட்டு விட்டனர். மழை காலங்களில், இச்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

- சங்கர்: வாகனங்கள் இயக்க சிரமம் கவுண்டர் மில், சுப்ரமணியம்பாளையம், சக்தி அவென்யூவில், பாதாள சாக்கடை கால்வாய் பணிக்காக சில மாதங்களுக்கு முன், தோண்டப்பட்ட சாலைகள், இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளன. வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.

- நந்தகுமார்: பஸ் ஸ்டாப் அருகே சங்கடம் திருச்சி ரோடு, ஒண்டிப்புதுார் பஸ் ஸ்டாப் - சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டில், மழை காலங்களில் மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு, சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது.

- ராபர்ட்: சாக்கடை கால்வாயை துார்வாரணும் செல்வபுரம், சாஸ்தா நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயை சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

- கிருத்திகா: அடிக்கடி விபத்து வெள்ளக்கிணர் - சமத்துவபுரம் ரோடு, அம்மாசை கவுண்டர் வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில், இக்குள்ள குழிகளில் நீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

- ராஜா: நடைபாதையை திறக்க வேண்டும் செல்வபுரம், சிந்தாமணி குளக்கரை நடைபாதை பகுதி நீண்ட நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி பராமரிப்பின்றி, புதர்போல் காட்சியளிக்கிறது.

- பாலமுருகன்: போக்குவரத்து போலீசார் வேண்டும் பொள்ளாச்சி - கோவை ரோடு, சுந்தராபுரத்தில், தனியார் மருத்துவமனை அருகில் உள்ள யுடர்ன் பகுதியில், நிமிடத்துக்கு நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இப்பகுதியில் நிரந்தரமாக போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்.

- கனகராஜ், குறிச்சி.






      Dinamalar
      Follow us