UPDATED : ஆக 05, 2026 05:19 PM
ADDED : ஆக 05, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: எல்.கோவில்பாளையம் மதுர காளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.
லக்கேபாளையம் கோவில்பாளையத்தில், பழமையான மதுர காளியம்மன் கோவிலின் திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு பம்பை மேளத்துடன் அம்மன் அழைத்தல், அம்மனுக்கு அபிஷேக, அலங்காரப் பூஜை நடந்தன. 9:00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. மதியம் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கின்றன.
