sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தங்கக்கட்டி வாங்கித்தருவதாக மோசடி

/

தங்கக்கட்டி வாங்கித்தருவதாக மோசடி

தங்கக்கட்டி வாங்கித்தருவதாக மோசடி

தங்கக்கட்டி வாங்கித்தருவதாக மோசடி


ADDED : ஜன 28, 2024 07:33 AM

Google News

ADDED : ஜன 28, 2024 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவையில் ஒரு காலத்தில், வெறும் வயல்களாகவும், தோட்டங்களாகவும் இருந்த நிலங்கள், இப்போது ஒரு சென்ட் பல லட்ச ரூபாய் அளவுக்கு, நில மதிப்பு உயர்ந்துள்ளதால், சாதாரண விவசாயிகளும் பல கோடிகளுக்கு அதிபதியாகி உள்ளனர்.

பெரும்பாலும் இந்த நிலங்கள் கருப்புப் பணத்தில் தான் கைமாறுவதால், அந்தப் பணத்தை எப்படி முதலீடு செய்வது என்பது தெரியாமல், பலரும் தவறான வழிகளைக் கையாள்கின்றனர்.

வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பண மோசடி, கோவையில் நடப்பதற்கும் இவர்களே அடித்தளமாகவுள்ளனர்.

தேக்கு மரம், ஈமு கோழி வளர்ப்பு துவங்கி, ஆன்லைன் மோசடிகள் வரை, இங்கே தான் அதிகளவு அரங்கேறியுள்ளது.

ஒவ்வொரு நுாதன மோசடிகளிலும், பல நுாறு கோடிகளை பலரும் ஏமாற்றிச் சென்றாலும், மீண்டும் மீண்டும் இங்கே தான் புதுப்புது மோசடிகள் முளைக்கின்றன. இந்த வரிசையில், சமீபத்தில் தங்கக்கட்டி வாங்கித்தருவதாக மோசடி நடந்துள்ளது.

இதில், ரூ.87 லட்சம் மோசடிப் புகாரின் பேரில், மதன்லால்பாப்னா, ஜிதேந்திரா பாப்னா ஆகிய இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒரு நாளுக்கு 200 கிலோ தங்க நகை வர்த்தகம், கோவையில் நடக்கிறது. இதனால், இத்தொழிலில் முதலீடு செய்ய யாரும் தயங்குவதில்லை என்பதை வைத்து, இந்த மோசடி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போது ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைக்கு மோசடி நடந்துள்ளதாகத்தான் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வாறு தங்கக்கட்டி வாங்கித்தருவதாகக் கூறி, வி.ஐ.பி.,க்கள், தொழிலதிபர்கள் என பலரிடமும், பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருப்பதாகவும், ஆனால் அதில் பெருமளவு கருப்புப் பணம் என்பதால், புகார் வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்துறையில் மிக முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு பெண் அதிகாரியின் சகோதரியும், தங்கக்கட்டி வாங்கித்தருவதாக மோசடி செய்வோரிடம், பல கோடி ரூபாய் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

புகார் இல்லாமலே, இத்தகைய வி.ஐ.பி.,க்களின் பணத்தை வாங்கித்தர முயற்சி நடப்பதாகவும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே, மோசடிக்காரர்களிடமிருந்து பணம் திரும்பக் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மற்றவர்கள், அந்தப் பணத்தை திரும்ப வாங்குவது குதிரைக்கொம்பான விஷயமாக இருக்கும்.

அதற்கு, பெருமளவு பணத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதோடு, ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டியிருக்கும் என்பதும் நிச்சயம்.

அதனால், பொது மக்கள் விழிப்புணர்வோடு இருப்பது மட்டுமே, இப்போதைக்கு இதற்கான ஒரே தீர்வாகும்.

-நமது சிறப்பு நிருபர்-






      Dinamalar
      Follow us