sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிடைத்தது பொது கழிப்பிடம்! ஆதிதிராவிடர் காலனி மக்கள் மகிழ்ச்சி

/

கிடைத்தது பொது கழிப்பிடம்! ஆதிதிராவிடர் காலனி மக்கள் மகிழ்ச்சி

கிடைத்தது பொது கழிப்பிடம்! ஆதிதிராவிடர் காலனி மக்கள் மகிழ்ச்சி

கிடைத்தது பொது கழிப்பிடம்! ஆதிதிராவிடர் காலனி மக்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 20, 2024 12:48 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்;'தினமலர்' செய்தி எதிரொலியாக, ஈச்சனாரியில் மழைநீர் சேமிப்பு வசதியுடன், ரூ.30 லட்சம் மதிப்பில் பொதுகழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.

ஈச்சனாரி அருகே மாநகராட்சியின், 97வது வார்டு பகுதியில், ஆதிதிராவிடர் காலனி உள்ளது.

இங்குள்ள அய்யப்பா நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, சுமார் 300 பேர் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு கழிப்பிடம் இல்லை. இயற்கை உபாதையை கழிக்க, திறந்தவெளியை பயன்படுத்தி வந்தனர். மக்கள் அனுபவிக்கும் சிரமம் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம், அங்குள்ள ஓடை ஒன்றின் அருகேயுள்ள அரசு நிலத்தில், 40 சென்ட் இடத்தில் பொது கழிப்பிடம் கட்டித்தர, ராக் அமைப்பிடம் கோரிகை விடுத்தார்.

அவர்கள், மிலாக்ரான் எனும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன், 30 லட்சம் ரூபாய் செலவில் சுமார், 700 சதுரடியில், 14 கழிவறை, நான்கு குளியலறைகளுடன் கழிப்பிடம் கட்டினர்.

இக்கட்டடத்தில், 10 ஆயிரம் லிட்டர் சேமிப்பதற்கான, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஆண்டுதோறும் சுமார், 70 நாட்கள் மழைநீரை பயன்படுத்தி, கழிப்பிடத்தை தூய்மையாக பயன்படுத்த முடியும்.

முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் கூறுகையில், அருகேயுள்ள காலியிடத்தில், பால்வாடி மையம், ரேஷன் கடை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us