'அரசு அலுவலர்கள் ரூ.500 தான் வைத்திருக்க வேண்டும்'
'அரசு அலுவலர்கள் ரூ.500 தான் வைத்திருக்க வேண்டும்'
ADDED : ஜூலை 09, 2026 06:10 AM
கோவை: மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் கடந்த வாரம் நடந்த ரெய்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று நடந்த கூட்டத்தில், இது தொடர்பாக கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
'வரி மதிப்பீடு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் சரியான காரணம் இல்லாமல் 7 நாட்களுக்கு மேல் 'பெண்டிங்' வைக்கக்கூடாது. தேங்க விடாமல் வேகமாக வேலை பார்க்க வேண்டும். மீறி உள்நோக்கத்துடன் ஆவணங்களை தேங்க வைத்தால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.
அரசு அலுவலர்கள் தங்கள் கையிருப்பாக ரூ.500 மட்டுமே வைத்திருக்க வேண்டும். கூடுதல் பணம் இருந்தால் அதற்குரிய ரசீது அல்லது ஆவணங்களை உடன் வைத்திருப்பது அவசியம் என, கமிஷனர் ரவி தேஜா எச்சரித்தார். துணை கமிஷனர் சரஸ்வதி, உதவி வருவாய் அலுவலர்கள், பில் கலெக்டர்கள் பங்கேற்றனர்.
