sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பகுதி நேர நுாலகங்களை தரம் உயர்த்த நுாலகர்கள் அமைப்பு வேண்டுகோள்

/

 பகுதி நேர நுாலகங்களை தரம் உயர்த்த நுாலகர்கள் அமைப்பு வேண்டுகோள்

 பகுதி நேர நுாலகங்களை தரம் உயர்த்த நுாலகர்கள் அமைப்பு வேண்டுகோள்

 பகுதி நேர நுாலகங்களை தரம் உயர்த்த நுாலகர்கள் அமைப்பு வேண்டுகோள்


ADDED : டிச 02, 2025 07:33 AM

Google News

ADDED : டிச 02, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பொது நுாலகத்துறையின் கீழ் செயல்படும், பகுதிநேர மற்றும் ஊர்புற நுாலகங்களை தரம் உயர்த்தி, வாசகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, அமைப்பின் மாநில துணைத்தலைவர் நாகராஜன் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பல கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களிலும் நவீன வசதிகள் கொண்ட சிறப்பு நுாலகங்களை, அரசு உருவாக்கி வருகிறது. அதே போல், பொது நுாலகத்துறையின் கீழ் செயல்படும் பகுதிநேர மற்றும் ஊர்புற நுாலகங்களையும் தரம் உயர்த்தி, வாசகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இந்த நுாலகங்களில் கடந்த, 15 ஆண்டுகளாக சிறப்பு ஊதியம் பெற்று வரும், 1006 நுாலகர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தவுடன், சிறப்பு காலமுறை ஊதியதாரர்களை, காலமுறை ஊதியத்துக்கு மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை வரும் தேர்தலுக்கு முன், நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us