sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் பிரதமர் மோடி "ரோடு ஷோ": வழிநெடுக மலர்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

/

கோவையில் பிரதமர் மோடி "ரோடு ஷோ": வழிநெடுக மலர்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கோவையில் பிரதமர் மோடி "ரோடு ஷோ": வழிநெடுக மலர்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கோவையில் பிரதமர் மோடி "ரோடு ஷோ": வழிநெடுக மலர்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

64


UPDATED : மார் 18, 2024 08:01 PM

ADDED : மார் 18, 2024 05:41 PM

Google News

UPDATED : மார் 18, 2024 08:01 PM ADDED : மார் 18, 2024 05:41 PM

64


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் சாலையின் இருபுறமும் திரண்ட பா.ஜ., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். பொய்க்கால் குதிரை வேடமிட்டும், வீணை இசைத்தும் பிரதமர் மோடியை இசைக் கலைஞர்கள் வரவேற்றனர்.Image 3579212

கர்நாடக மாநிலம் ஷிவமொகா விமான நிலையத்தில் இருந்து, தேர்தல் பிரசாரத்துக்காக இன்று(மார்ச் 18) மாலை கோவைக்கு பிரதமர் மோடி வந்தார். சாய்பாபா காலனியில் இருந்து துவங்கிய, 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, மக்களை நோக்கி கையசைத்தப்படி காரில் சென்றார். ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் திறந்தவெளி வாகனத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Image 1246416பிரதமர் மோடியை வரவேற்க சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்திருந்தனர். சாலையின் இருபுறமும், கூடிய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்றனர்.

Image 1246417இந்த 'ரோடு ஷோ' நிகழ்ச்சி வடகோவை, டி.பி.ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ., தூரம் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோவை குண்டுவெடிப்பு: மோடி அஞ்சலி


பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி, 1998 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து காரில் புறப்பட்டுஇரவு, 7:15 மணிக்கு, ரேஸ்கோர்சில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று பிரதமர் மோடி ஓய்வெடுக்கிறார். நாளை கோவையில் இருந்து விமானம் மூலம் பாலக்காட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.






      Dinamalar
      Follow us