/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை காட்டில் இறந்த புலி; பரிசோதனைக்கு பின் எரியூட்டல்
/
தேயிலை காட்டில் இறந்த புலி; பரிசோதனைக்கு பின் எரியூட்டல்
தேயிலை காட்டில் இறந்த புலி; பரிசோதனைக்கு பின் எரியூட்டல்
தேயிலை காட்டில் இறந்த புலி; பரிசோதனைக்கு பின் எரியூட்டல்
ADDED : நவ 02, 2025 08:42 PM
வால்பாறை: வில்லோனி தேயிலை காட்டில், இறந்த புலியை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பின் எரியூட்டினர்.
வால்பாறை அடுத்துள்ளது வில்லோனி எஸ்டேட். வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இங்குள்ள 12 நெம்பர் தேயிலை எஸ்டேட்டில், 12 வயதுடைய பெண் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் விரைந்து சென்று, புலியை நேரில் பார்வையிட்டனர்.
அதன் பின் வனத்துறை வனச்சரக அலுவலர்கள் சுரேஷ்கிருஷ்ணா, கிரிதரன் ஆகியோர் தலைமையில் வன கால்நடை மருத்துவர் வெண்ணிலா, கோவை உதவி கால்நடை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இறந்த புலி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேயிலை எஸ்டேட் பகுதியில் இறந்து கிடந்த பெண் புலிக்கு, 12 முதல் 15 வயது இருக்கும். சம்பவ இடத்திலேயே இறந்த புலியை உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன் பின் புலியின் உடல் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் எரியூட்டப்பட்டன. வயதானதால் தான் புலி இரை தேட முடியாத நிலையில் இறந்துள்ளது' என்றனர்.

