sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பஸ்சில் பணம் திருட்டு: இளம் பெண்கள் கைது

/

 பஸ்சில் பணம் திருட்டு: இளம் பெண்கள் கைது

 பஸ்சில் பணம் திருட்டு: இளம் பெண்கள் கைது

 பஸ்சில் பணம் திருட்டு: இளம் பெண்கள் கைது


ADDED : டிச 07, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 07, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பஸ்ஸில் பாரத் செல்வி, 38, என்ற பெண் பயணித்துள்ளார்.

பஸ்ஸில் நெரிசல் அதிகமாக இருந்ததால், அவர் நின்று கொண்டே பயணித்துள்ளார். இதனிடையே சத்தியமூர்த்தி நகர் அருகே பஸ் வரும்போது, நடத்துனர் பாரத் செல்வியிடம் டிக்கெட் எடுக்க சொல்லி கேட்டார். அப்போது பாரத் செல்வி தனது கைப்பையை பார்த்தபோது, அது திறந்த நிலையில் இருந்தது. அதில் இருந்து பணம் திருடு போயிருந்தது.

சத்தமிட்டதும் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது பஸ்ஸில் இருந்து இரண்டு இளம் பெண்கள் வேகமாக கீழே இறங்கி ஓட முயற்சித்தனர்.

அவர்களை பஸ்சில் உள்ள சகப் பயணிகள் பிடித்து, மேட்டுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் அஞ்சலி, 27, மற்றும் ரம்யா, 28, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us