ADDED : ஏப் 28, 2024 04:29 AM
கடலுார் : கடலுாரில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பஸ்கள் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.
மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் என, 11 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன.
இந்த பணிமனைகளில் 241 டவுன் பஸ்கள், 351 ரூட் பஸ்கள் என, 592 பஸ்கள் இயக்கப்படுகிறது. அனைத்து அரசு பஸ்களின் வலிமைத் தன்மை குறித்து சோதனை செய்ய அரசு போக்குவரத்து கழக செயலாளர் பனிந்திர ரெட்டி அனைத்து போக்குவரத்து கழககங்களும் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், கடலுார் மண்டல பொது மேலாளர் ராஜா தலைமையில் ஒவ்வொரு பணிமனையிலும் ஒரு கண்காணிப்பாளர் ஒரு உதவி பொறியாளர், இரண்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட குழு பஸ்களை ஆய்வு செய்யும்.
ஆய்வில் பஸ்களில் பாடி வலிமை, பிளாட்பார்ம், புட்போர்டு, சீட்டுகள், கண்ணாடிகள், விளக்குகள், வழித்தடம் போர்டுகள், சேஸ் கிளாம்பு போன்ற அனைத்து வகையிலும் ஆய்வு செய்து உடன் சீரமைக்கப்படும்.
பனிமனைகளில் இருந்து ஒவ்வொரு பஸ்களின் ஆய்வு ரிப்போர்ட் மற்றும் பழுது நீக்கம் செய்யப்பட்ட ரிப்போர்ட் என, 24 மணி நேரத்தில் சென்னை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதனால் கடலுார் மாவட்டத்தில் உள்ள 11 பனிமனைகளிலும் அரசு பஸ்கள் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

