sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 போலீஸ் பயன்படுத்தியவாகனங்கள் 23ம் தேதி பொது ஏலம் 

/

 போலீஸ் பயன்படுத்தியவாகனங்கள் 23ம் தேதி பொது ஏலம் 

 போலீஸ் பயன்படுத்தியவாகனங்கள் 23ம் தேதி பொது ஏலம் 

 போலீஸ் பயன்படுத்தியவாகனங்கள் 23ம் தேதி பொது ஏலம் 


ADDED : டிச 09, 2025 07:01 AM

Google News

ADDED : டிச 09, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட போலீசில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 23ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

இது குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்ட போலீசில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 16, இரண்டு சக்கர வாகனங்கள் 34 என மொத்தம் 50 வாகனங்கள் வரும் 23ம் தேதி காலை 10:00 மணிக்கு கடலுார் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 22ம் தேதி மாலை 5:00 மணி வரை கடலுார் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோர் 22ம் தேதி அன்றே இரு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப் படுவர். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான ஜி.எஸ்.டி., வரியாக இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் தொகையை ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us