sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கடலுார் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

/

 கடலுார் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

 கடலுார் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

 கடலுார் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்


ADDED : டிச 09, 2025 07:00 AM

Google News

ADDED : டிச 09, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில், மாதந்தோறும் நடத்தப்படும் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் வரும் 13ம் தேதி காலை10:00 மணி முதல் பகல் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், வட்ட வழங்கல் பிரிவில் நடக்கிறது. முகாமில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல்எண் பதிவு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு சென்று, பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்கள் அளிக்கலாம். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய ரேஷன் பெற மனுக்கள் அளிக்கலாம்.

ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us