/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்கள் குறைகேட்பு கூட்டம் 712 மனுக்கள் குவிந்தன
/
மக்கள் குறைகேட்பு கூட்டம் 712 மனுக்கள் குவிந்தன
ADDED : டிச 09, 2025 07:08 AM

கடலுார்: பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 51 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 3,34,500 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.
நேற்றைய கூட்டத்தில் 712 மனுக்கள் பெறப் பட்டன.
கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 மாற்றுத்திறனாளிக்கு, தலா 6,500 ரூபாய் வீதம் மொத்தம் 3,25,000 ரூபாய் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திம், ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு 9,500 ரூபாய் மதிப்பீட்டிலான சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி, நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

