/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார்த்திகை 4வது சோமவாரம் கோவில்களில் சங்காபிஷேகம்
/
கார்த்திகை 4வது சோமவாரம் கோவில்களில் சங்காபிஷேகம்
கார்த்திகை 4வது சோமவாரம் கோவில்களில் சங்காபிஷேகம்
கார்த்திகை 4வது சோமவாரம் கோவில்களில் சங்காபிஷேகம்
ADDED : டிச 09, 2025 07:06 AM

விருத்தாசலம்: கார்த்திகை மாத நான்காவது சோமவாரத்தையொட்டி, விருத்தாசலம் கோவில் சுவாமிகளுக்கு சங்காபிஷேகம் நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர் சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சுவாமி சன்னதியில் புனித நீர் கலசங்கள், 108 சங்குகள் வைத்து, உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. பின்னர், மூலவருக்கு சங்காபிஷேகம் நடந்தது.
இதேபோல், ரயில்வே குடியிருப்பில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் மீனாட்சி அம்மன் உடனுறை செந்தமிழ் சொக்கநாதர் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.
கோமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவிலில் சங்காபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். ஏராளாமானோர் தரிசனம் செய்தனர்.

