sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருமண மண்டபத்திற்கு 'சீல்' விருத்தாசலத்தில் பரபரப்பு

/

திருமண மண்டபத்திற்கு 'சீல்' விருத்தாசலத்தில் பரபரப்பு

திருமண மண்டபத்திற்கு 'சீல்' விருத்தாசலத்தில் பரபரப்பு

திருமண மண்டபத்திற்கு 'சீல்' விருத்தாசலத்தில் பரபரப்பு


ADDED : மார் 14, 2024 11:41 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சொத்து வரி செலுத்தாத திருமண மண்டபத்திற்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்ததால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் நகராட்சிக்கு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கி ரூ.1 கோடியே 40 லட்சம் நிலுவையில் உள்ளது.

நகராட்சி மேலாளர் கனிமொழி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர் செல்வம், வருவாய் ஆய்வாளர் ஷகிலா பானு, வருவாய் உதவியாளர் ரவி, முருகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர், ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுக்கும் சென்று சொத்து வரி பாக்கியை வசூலித்து வருகின்றனர்.

மேலும், ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் நிலுவை வைத்துள்ள தொழில் நிறுவனங்களில் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், முல்லை நகரில் உள்ள முகமது ஹனிபா என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 232 ரூபாய் வரிபாக்கி பாக்கி இருந்தது. இதுசம்பந்தமாக கடந்த 9ம் தேதி ஜப்தி நோட்டீஸ் ஒட்டியும் இதுவரை வரி பணம் கட்டவில்லை.

இதனால், நேற்று அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.

அதேபோல், வரிபாக்கி உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சென்று ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள போவதாக கூறி, நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.

இச்சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us