/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் மரம் நடும் விழா
/
அரசு கல்லுாரியில் மரம் நடும் விழா
ADDED : பிப் 03, 2025 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மரம் நடும் விழா நடந்தது.
குமராட்சி அடுத்துள்ள கீழவன்னியூரில் அமைந்துள்ள, காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மரம் நடு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மீனா, குமராட்சி பி.டி.ஓ., சரவணன் தலைமை தாங்கினர்.
தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன், நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிற்றரசு ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகள் கல்லுாரி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டனர்.

