/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியில்லாத கட்டடம்; நகராட்சி அதிகாரிகள் 'சீல்'
/
அனுமதியில்லாத கட்டடம்; நகராட்சி அதிகாரிகள் 'சீல்'
ADDED : மே 27, 2025 11:10 PM
விருத்தாசலம்; உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், விருத்தாசலத்தில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் கட்டடத்தை, நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
விருத்தாசலம் பாலக்கரை அருகே நகராட்சி அனுமதியின்றி, ரமேஷ் என்பவர் புதிதாக கட்டடம் கட்டி வருகிறார்.
இதுகுறித்து, விருத்தாசலத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதன்பேரில், நேற்று கட்டடத்திற்கு சீட் வைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில், நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமையில், நகரமைப்பு அலுவலர் செல்வம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், அனுமதியின்றி கட்டப்படும் புதிய கட்டடத்திற்கு நேற்று 'சீல்' வைத்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

