sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'கவனிப்பு' இருந்தால் மட்டுமே வேலை; சிதம்பரம் நகராட்சியில் அடாவடி

/

'கவனிப்பு' இருந்தால் மட்டுமே வேலை; சிதம்பரம் நகராட்சியில் அடாவடி

'கவனிப்பு' இருந்தால் மட்டுமே வேலை; சிதம்பரம் நகராட்சியில் அடாவடி

'கவனிப்பு' இருந்தால் மட்டுமே வேலை; சிதம்பரம் நகராட்சியில் அடாவடி


ADDED : மே 27, 2025 11:12 PM

Google News

ADDED : மே 27, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சில அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பிரிவில் சிறிய வேலை என்றாலும், அதை முடிப்பதற்குள் போதும் என்றாகி விடுகிறது. ஒரு முறைக்கு பல முறை நடந்தால் மட்டுமே வேலை முடியும் என்ற நிலை உள்ளது. காரணம் அந்தளவிற்கு அதிகாரிகள் அலட்சியாக பணிபுரிகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பெண் ஒருவர் தனது பெயரில் தவறுதலாக போடப்பட்ட இன்சியலை மாற்ற, பிறப்பு - இறப்பு பிரிவில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பெண்கள், முதியவர்கள் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் வேலை முடிந்தால் போதும் எனக் கூறி காசு கொடுத்து விட்டு வேலையை சுலபமாக முடித்துக் கொண்டு திரும்புகின்றனர்.

ஆனால் ஏழை, எளிய மக்களின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. கவனிப்பு செய்தால் மட்டுமே வேலை நடக்கிறது என்ற நிலை உள்ளது.

எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us