ADDED : ஜூலை 06, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஜூலை 7
தேசிய பசுமை புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றும் போட்டி திண்டுக்கல்லில் நடந்தது. வயது வித்தியாசம் இன்றி 60 பேர் பங்கேற்றனர். வேடசந்துார் பி.வி.எம்., மெட்ரிக் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி சுவாதிகா வெற்றி பெற்றார்.
நிறுவன சேர்மன் முருகபாண்டியன், நடுவர் சரவணபாண்டியன் ஆகியோர் மாணவிக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கினர். தாளாளர் செந்தில்குமார், ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டினர்.
