/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கும்பாபிஷேகத்தில் 10 பவுன் நகை திருட்டு
/
கும்பாபிஷேகத்தில் 10 பவுன் நகை திருட்டு
ADDED : டிச 02, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம்- அண்ணாநகரில் நடந்த கும்பாபி ேஷகத்தில் பங்கேற்ற இருவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை திருடுபோனது.
தேனி-பங்களாமேட்டை சேர்ந்தவர் சோலையம்மாள் 66. நத்தம்-அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தவர் நேற்று முன்தினம் காலை அப்பகுதியில் நடந்த கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த வீரமணி 72, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர். நத்தம் -எஸ்.ஐ., அருண்நாராயணன் விசாரிக்கிறார்.

