/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டுப்பதிவு நாளில் 'லீவு' நிறுவனங்களுக்கு அறிவுரை
/
ஓட்டுப்பதிவு நாளில் 'லீவு' நிறுவனங்களுக்கு அறிவுரை
ஓட்டுப்பதிவு நாளில் 'லீவு' நிறுவனங்களுக்கு அறிவுரை
ஓட்டுப்பதிவு நாளில் 'லீவு' நிறுவனங்களுக்கு அறிவுரை
ADDED : பிப் 04, 2025 05:48 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவு நாளான நாளை தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய
விடுமுறை அளிப்பது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை சார்பில் கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட
தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமை வகித்து பேசினார். இடைத்தேர்தலில், 100
சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய ஏதுவாக, வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், அவர்களுக்கு
ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நிறுவ-னங்கள் மீதான புகாரை தேர்தல்
கட்டுப்பாட்டு அறைக்கு தெரி-விக்கலாம் என்றார். உதவி ஆணையர் ஜெயலட்சுமி - 94453 98751, தொழிலாளர் துணை ஆய்வாளர்- 2ம் சரகம் மயில்வாகன் - 98404
56912, உதவி ஆய்வாளர் 2ம் சரகம் பேரோஸ் அகமது - 99656 34839, அலுவல-கத்தை, 0424 2270090 என்ற
எண்களில் புகாராக தெரிவிக்கலாம், என்றார்.

