ADDED : மார் 20, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:உரிமம்
இல்லாமல் டிப்பர் லாரியில், மண் அள்ளிக்கொண்டு வருவதாக, பருவாச்சி
வி.ஏ.ஒ., அமுதவள்ளிக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் போனது.
இதையடுத்து பாட்டப்பன் கோவில் - பெருமாள் மலை அடிவாரம் சாலையில் வந்த
டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மண் இருந்தது. ஆனால்,
உரிய அனுமதி பெறாதது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்தது நகலுார் பிரிவை
சேர்ந்த சுரேஷ், 31, என்பது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து
அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார்.

