/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம உதவியாளர்கள் கையெழுத்து இயக்கம்
/
கிராம உதவியாளர்கள் கையெழுத்து இயக்கம்
ADDED : டிச 09, 2025 10:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கையை வலியு-றுத்தி, கோபி தாலுகா ஆபீசில் நேற்று மாலை, ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். முன்னாள் மாநில தலைவர் ராஜசேகர் தலை-மையில், கோரிக்கையை நிறைவேற்ற கோரி, அதற்கான மனுக்களில் தங்களின் ரத்தத்தால் கையெழுத்திட்டு, தமிழக முதல்வருக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
வரும், 17ம் தேதி சென்னையில் பேரணியாக சென்று, தமிழக முதல்வரிடம் நேரடியாக மனுக்களை ஒப்படைக்-கவுள்ளதாக தெரிவித்தனர்.

