ADDED : ஆக 30, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த அம்சாகுளத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா மகள் ரோஷினி,13; கடந்த 26ம் தேதி மதியம் 4:00 மணியளவில் வெளியில் சென்று வருவதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்ற ரோஷினி, வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் ஷான்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

