ADDED : ஜூலை 26, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட தலைவர் காஞ்சனா மேரி தலைமை தாங்கினார்.
மத்திய அரசு பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களின் வருமான வரி உச்ச வரம்பை ரூ.10 லட்சமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் பாசில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

