sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணுடன் இருந்த வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய சாமியார் கைது

/

பெண்ணுடன் இருந்த வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய சாமியார் கைது

பெண்ணுடன் இருந்த வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய சாமியார் கைது

பெண்ணுடன் இருந்த வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய சாமியார் கைது


ADDED : ஆக 26, 2024 09:41 AM

Google News

ADDED : ஆக 26, 2024 09:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பெண்ணுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வதாக, பெண்ணின் கணவரை மிரட்டிய சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த வாசுதேவனுாரைச் சேர்ந்தவர் டிரைவர். இவர் அதே பகுதியில் உள்ள ஐயனாரப்பன் கோவிலில் சுவாமி கும்பிட செல்வது வழக்கம். அப்போது, கோவிலில் சாமியாராக இருந்த சின்னசேலத்தை சேர்ந்த முத்தையன், 42; என்பவர் அறிமுகம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, வாசுதேவனுாரில் வீடு கட்ட இடம் வேண்டும் என சாமியார் கேட்டுள்ளார். அப்போது, அந்த டிரைவருக்கு சொந்தமான இடத்தை 4 லட்சத்துக்கு விற்றுள்ளார்.

இந்நிலையில், அந்த டிரைவரின் மனைவிக்கும் சாமியார் முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை டிரைவர் கண்டித்ததுடன், விற்ற இடத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், சாமியார் இடத்தை தர மறுத்ததுடன், கடந்த 15ம் தேதி இரவு டிரைவரின் வீட்டிற்குச் சென்று, உன் மனைவியுடன் நான் இருந்த வீடியோ, புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்வேன் என மிரட்டியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து சாமியார் முத்தையனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us