/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாயுமானவர் திட்டத்தில் 28,133 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்
/
தாயுமானவர் திட்டத்தில் 28,133 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்
தாயுமானவர் திட்டத்தில் 28,133 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்
தாயுமானவர் திட்டத்தில் 28,133 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்
ADDED : டிச 07, 2025 05:55 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 766 ரேஷன் கடைகளை சேர்ந்த 28,133 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெற்று வருகிறனர்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழக அரசு வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டு குடும்பத்தினர் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் துவங்கி உள்ளது. இத்திட்டத்தின்படி மாதத்தின் 2வது வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முதியோர், மாற்றுத்திறனாளி குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு, நடமாடும் வாகனங்கள் மூலம் அவர்களின் வீட்டிற்கே சென்று பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 766 ரேஷன் கடைகளில் உள்ள 28,133 ரேஷன் கார்டுகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

