/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடன் தொல்லையால் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
/
கடன் தொல்லையால் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
கடன் தொல்லையால் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
கடன் தொல்லையால் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
ADDED : மார் 17, 2024 05:39 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் கடன் தொல்லையால் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் ராமு மகன் மகேஸ்வரன், 26; இவர், கடன் வாங்கி ேஷர் மார்க்கெட்டில் முதலீடு செய்தார்.
அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடன்தாரர்கள் கொடுத்த பணத்தை கேட்டதால், மனஉளைச்சலில் இருந்த மகேஸ்வரன் கடந்த 9ம் தேதி விஷம் குடித்தார்.
உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற மகேஸ்வரன் நேற்று முன்தினம் மாலை இறந்தார்.
புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மகேஸ்வரனின் தம்பி சிங்காரவேல் கடன் தொல்லையால் கடந்த 4 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகேஸ்வரனும் தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

