sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., 'கன்பார்ம்' ஹாட்ரிக் வெற்றியால் ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை

/

 கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., 'கன்பார்ம்' ஹாட்ரிக் வெற்றியால் ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை

 கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., 'கன்பார்ம்' ஹாட்ரிக் வெற்றியால் ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை

 கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., 'கன்பார்ம்' ஹாட்ரிக் வெற்றியால் ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை


ADDED : டிச 02, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 02, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க ள்ளக்குறிச்சி தொகுதியில் தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த அ.தி.மு.க., வரும் தேர்தலிலும் நேரடியாக களம் காணும் என்பது உறுதியாக தெரிகிறது.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியை பொருத்தவரை அ.தி.மு.க., தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக வரும் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்று அ.தி.மு.க., கருதுகிறது.

இதனால் இக்கட்சியில் கள்ளக்குறிச்சி தொகுதியில் சீட் பெற கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2009ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பில் கள்ளக்குறிச்சி தொகுதி உருவாக்கப்பட்ட பின் 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.,கவும் தி.மு.க., கூட்டணி சார்பில் வி.சி.,வும் போட்டியிட்டது.

அ.தி.மு.க.,வில் போட்டியிட்ட அழகுவேல் பாபு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 249 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். வி.சி., வேட்பாளர் பாவரசு 51 ஆயிரத்து 251 ஓட்டுகள் பெற்றார். இத்தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 தொகுதிகளில் கள்ளக்குறிச்சியும் ஒன்றாகும்.

தொடர்ந்து 2016 தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., நேரடியாக மோதியது. இதனால் கடும் போட்டி நிலவியது. முடிவில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரபு 90 ஆயிரத்து 108 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் காமராஜ் 86 ஆயிரத்து 4 ஓட்டுகள் பெற்று 4,104 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., இடையே பலப்பரீட்சை நடந்தது. முடிவில் அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 643 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் மணிரத்தினம் 84 ஆயிரத்து 752 ஓட்டுகள் பெற்றார்.

கடந்த 3 தேர்தலிலும் தி.மு.க.,வுடனும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள காங்., மற்றும் வி.சி., ஆகிய கட்சியுடன் மோதி ஹாட்ரிக் வெற்றியை அ.தி.மு.க., சுவைத்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்பி தி.மு.க.,வை மக்கள் ஆதரித்த போதிலும் கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனால் வரும் தேர்தலில் எதிரணியில் யார் களமிறங்கினாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க., நேரடியாக இத்தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us